இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை (8ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை காலை 5 மணிக்கு மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் சீல் வைத்து இருப்பு வைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு பெட்டிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், துணை ராணுவ வீரர்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதையடுத்து காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளன. தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்குகிறது. 17 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளது. காலை 10 மணியளவில் முடிவு தெரிய வாய்ப்புள்ளது.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணிக்கு முடிவு தெரியும் appeared first on Dinakaran.
