குன்னம், பிப்.7: குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சட்ட பணிகள் குழு சார்பாக மைனர் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது. குன்னம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, குன்னம் சட்டப்பணிகள் குழு அலுவலர் சிராஜ்ஜீன் ஆகியோர் மாணவிகளுக்கு போக்சோ சம்பந்தமான சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக ஆசிரியர் முருகானந்தம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பிரியா தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சத்தியமூர்த்தி, அன்புத்தமிழன்இலக்கியா, சக்திவேல் மற்றும் அனைத்து ஆசிரிர்கள் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post குன்னம் அரசு பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.
