தொடர்ந்து உயரும் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.63,440க்கு விற்பனையாகி புதிய உச்சம்

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரு பவுன் ரூ. 63,440க்கு விற்பனையாகி வரலாற்று புதிய உச்சம் கண்டது. இன்னும் விலை அதிகரிக்க கூடும் என்ற தகவலால் நகை வாங்குவோர் அச்சம் அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,930க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.63,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது நகைவாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி கிராம் ரூ.107க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையானது. இன்னும் விலை அதிகரிக்க கூடும் என்ற அறிவிப்பு நகை வாங்குவோரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தொடர்ந்து உயரும் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.63,440க்கு விற்பனையாகி புதிய உச்சம் appeared first on Dinakaran.

Related Stories: