இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேருக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசாரால் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். சிபிசிஐடி போலீசார், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனர். இதனையடுத்து 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி பாரதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார், சம்பந்தப்பட்ட 5 பேரையும் பலத்த பாதுகாப்போடு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினர். பின்னர் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஆயுதபடை மைதானத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை வரை விடிய விடிய 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெறுகிறது. அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.
The post திருமயம் சமூக ஆர்வலர் கொலையில் 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.
