கலைஞர் முதல்வராக இருந்தபோது நுழைவுத்தேர்வு முறையை முற்றிலும் தடை செய்தார். அதன்காரணமாக 75 சதவீத மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாநில உரிமை சார்ந்த கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது. ஆளுநரே நியமன பதவியில் உள்ளவர் என்பதால் அவர் எவ்வாறு பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க முடியும். தமிழ்நாடு மாணவர்களின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கும் யுஜிசி விதிமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மாநில உரிமை கல்வி கொள்கையில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.
