*உலக புத்தாக்க மையமாக இந்தியா மாறும்.
*80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
*2047ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
*நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களை நிறைவு செய்ய ஒன்றிய அரசின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
*நாடு முழுவதும் தடையின்றி டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது.
*ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
*ஏழைகளின் கனவுகளை நனவாக்க ஒன்றிய அரசு பாடுபட்டு வருகிறது.
*80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
*நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
*மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
*ஒன்றிய அரசின் சீரிய நடவடிக்கைகளால் 25 கோடி ஏழைகள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.
*சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் தொகை ரூ.20 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளது.
*தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது.
*நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செயல்பாட்டில் உள்ளன.
*அதிவேகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
*25 கோடி பேரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளோம்
*நாட்டின் வளர்ச்சி அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது
*2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
*நாடு முழுவதும் விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
*100-வது ராக்கெட் விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
*ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி என்பதே இலக்கு.
*ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருகிறது.
*அனைவருக்குமான வளர்ச்சி என்பது தான் ஒன்றிய அரசின் தாரக மந்திரம்.
*உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
*பெண்களின் தலைமையின் கீழ் நாட்டை அதிகாரம் செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது அரசு
*நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயம்.
*வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.
The post 80% தள்ளுபடி விலையில் மருந்துகள்; ஏழைகளின் கனவுகளை நனவாக்க பாடுபடும் ஒன்றிய அரசு: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை appeared first on Dinakaran.