இதையடுத்து சமையலறைக்கு சென்று காஸ் சிலிண்டர் வால்வை பிடுங்கி பற்ற வைத்து விட்டு படுக்கையறைக்கு வந்து விட்டார். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறி தீ பரவியது. இதில் வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அலறியடித்து கொண்டு வீடுகளுக்கு வெளியே ஓடி வந்தனர். பின்னர் மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது செந்தாமரை மீது தலை வைத்தவாறு இளங்கோவன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தாமரை உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வீட்டின் மாடியில் வசித்து வந்த இளங்கோவனின் மருமகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மனைவி இறந்த சோகம் தாங்காமல் சிலிண்டரை வெடிக்க வைத்து மருத்துவர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.