அமெரிக்காவில் விமான பயணங்களை மேற்கொள்வோர் அதிகம். அங்கு விமான சேவை என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம், தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டருடன் விமானம் மோதி போடோமாக் நதி பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
The post அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு! appeared first on Dinakaran.