ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தை சேந்த 6 மீனவர்களை கைது செய்து இலங்கை அழைத்து சென்றனர்.
இதனை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். appeared first on Dinakaran.