அந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், தமிழக மீனவர்கள் பின்பற்றுகிற இழுவலை மீன்பிடி முறையை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சிக்கு வந்தது. கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகப்பெரிய வல்லரசாக இருக்கிற இந்தியா சின்னஞ்சிறிய நாடான இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளோடு மீன்பிடிக்கிற உரிமையை பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஒப்பந்தத்தை போட வேண்டும்.
The post இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க ஒப்பந்தம்: செல்வப்பெருந்தகை கருத்து appeared first on Dinakaran.