இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘முல்லைப் பெரியாறு அணை 130 ஆண்டுகள் மேல் இருக்கும் அணை ஆகும். எத்தனை பருவ மழையை அது கண்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அணை இன்னமும் உறுதியாக உள்ளது. மக்கள் அணை உடைந்து விடும் என்னும் அச்சத்தில் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உங்களது அச்சம் என்பது காமிக்ஸ் கதைகளை போல அச்ச உணர்வில் உள்ளதாக நாங்கள் தான் உணர்கிறோம். நாங்களும் கேராளவில் வசித்துள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணை நமது வயதை விட இரு மடங்கு வயதிலும், நிலையானதாகவும், உறுதியாகவும் உள்ளது. பல பருவ மழையை கண்டும் நிலைத்துள்ள அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் வேறு அமர்வு விசாரித்து வருவதால், இந்த வழக்கையும் அந்த மனுக்களோடு இணைத்து விசாரிக்க பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிரடி appeared first on Dinakaran.
