ஷரோன் ராஜ் உடனான தொடர்பை கிரீஷ்மா துண்டித்த பிறகும், அவர் தொடர்ந்து காதலி வீட்டுக்குச் சென்றுள்ளார். தொடர்ந்து தொல்லை தரும் ஷரோனை கொல்ல முடிவு செய்து கிரீஷ்மா, அவருக்கு விஷம் கலந்த கஷாயம் கொடுத்துள்ளார். விஷம் கலந்த கஷாயத்தை குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஷரோன் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து தந்து கொன்ற வழக்கில் காதலியும், அவரது மாமனும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. காதலன் ஷரோன் ராஜுக்கு காதலில் கிரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியாகி உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரீஷ்மாவின் மாமன் நிர்மல்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நொய்யாற்றங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
The post காதலனுக்கு கஷாயத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கில் காதலிக்கு தூக்கு தண்டனை விதிப்பு! appeared first on Dinakaran.
