டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் மோசடிகளும் அதிகரித்துள்ளதால் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் பல வழிகளில் மொபைல் எண்ணை தவறாகப் பயன்படுத்தலாம். எனவே ‘1600xx’ எண்ணின் வரிசையைப் பயன்படுத்தி மட்டுமே பரிவர்த்தனை / சேவை அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். ‘140xx’ எண் தொடர்களைப் பயன்படுத்தி மட்டுமே விளம்பர குரல் அழைப்பு, எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டும். இந்த நடவடிக்கைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
The post அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களை அழைக்க ‘1600xx’ எண்: மோசடியை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி appeared first on Dinakaran.
