உலக முதலீட்டாளர்களுடன் உறவுகளை மேம்படுத்துதல், மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் தமிழகத்தின் திறனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுதல், வளர்ந்து வரும் உலகளாவிய திறன் மைய துறையில், தகவல் தொழில்நுட்பம் சேவை துறைகளை மேம்படுத்துதல், மெட்டெக், ஹெல்த்கேர், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய புதிய துறையில் முதலீடுகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனையின்போது, “தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வர வேண்டும் என்று பல்வேறு நாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து பேசவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திட்டமிட்டுள்ளார். ‘நுண்ணறிவு கலத்திற்கான ஒருங்கிணைப்பு’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள அமர்வில் ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட குழுவுடன் தமிழ்நாடு அரசு குழுவும் கலந்து கொள்கிறது. இந்த குழுவில் ஆந்திரம், மராட்டியம், தெலங்கானா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் கேரளா ஆகிய 6 இந்திய மாநிலங்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
* வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழ்நாடு
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும்போது, “டாவோஸ் மாநாட்டில் ‘வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளோம். மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தொழில் செய்து வரும் நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்களையும் முன்னிறுத்தி முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்கிறோம். தமிழ்நாட்டின் சாதன அம்சங்களை உலக பொருளாதார மாநாட்டில் முன்னிறுத்தி முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
The post சுவிட்சர்லாந்தில் நாளை மறுதினம் தொடங்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்கிறார்: முதலீட்டாளர்களை சந்திக்கவும் திட்டம் appeared first on Dinakaran.
