பாஜவும் பின்வாங்கிக் கொண்டது. ஆனால் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவை அந்த தொகுதியில் போட்டியிட வைத்தது. ஆனால் அதில் பாஜ கூட்டணிக்கு தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிகவும் போட்டியிடவில்லை என அறிவித்தது. பாஜ போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜவும் போட்டியிடவில்லை என நேற்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பாஜ கூட்டணியில் உள்ள பாமக, தமாகாவும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆதரவின்றி போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தும், தனித்து நின்றாலும் ஓட்டுகள் பெற முடியாது என நினைத்தும் பாஜ இந்த முடிவை எடுத்திருக்கிறது என்பது தெளிவாகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜ வேட்பாளர்கள் பெற்ற வெற்றி கூட அதிமுக கூட்டணியின் தயவுதான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
The post ‘தனித்து நின்றால் ஓட்டுகள் பெற முடியாது’: இடைத்தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட தயங்கும் பாஜ appeared first on Dinakaran.
