இந்த ஆண்டும் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 107 கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 166 பட்டாசு மையங்களில் விற்கப்படுகிறது. இந்த ஆண்டு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவுத்திடலில் சுற்றுலாத் துறையின் சார்பில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலமுறைகள் விடப்படும். தற்போது கூட்டுறவுத் துறையின் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக இந்த பணிகளை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன் அடிப்படையில், 50 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதில் 10 கடைகளை டியுசிஎஸ் மொத்த விற்பனை பண்டகச்சாலை, பூங்கா நகரக் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை மற்றும் வடசென்னை கூட்டுறவு சங்கங்களின் சார்பாக அமைக்கப்பட்டு விற்பனை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ப.காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பட்டாசு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும்: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.