×
Saravana Stores

சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் – 2005ன் கீழ் தட்டச்சர் பதவிக்கு ரூ.12 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியிடம் ஒன்று மட்டும் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு கீழ்நிலை மற்றும் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக கணினி பயன்பாட்டினை அறிந்தவராக இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலர், 2வது தளம், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Social Welfare ,Thiruvallur ,Collector ,T.Prabhushankar ,Tiruvallur District Social Welfare Office ,
× RELATED சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை...