லிங்கமநாயக்கன்பட்டியிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பழுதடைந்த சாலையில் விபத்து அபாயம்

 

அரவக்குறிச்சி, அக்.25: அரவக்குறிச் ஒன்றியம் லிங்கமநாயக்கன்பட்டியிலிருந்து கரூர் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ளதால் இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியம் லிங்கமநாயக்கன்பட்டியிலிருந்து பங்கார்பாடி வழியாக கரூர் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை சொக்கலாபுரம் சாலை வழியாக கிராமப்பகுதியில் இருந்து நகரங்களுக்கு கொத்தனார், தச்சர், கட்டட வேலைக்கு நகரங்களுக்கு சென்று வருபவர்கள் , திண்டுக்கல், கரூர் செல்பவர்கள் இந்த சாலைவழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்த 2 தார் சாலைகளுமே மிக மோசமாக பழுதடைந்துள்ளது. கிராமப்பகுதியில் இருந்து நகரங்களுக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் சிரமப்பட்டு செல்லவேண்டியுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலை பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post லிங்கமநாயக்கன்பட்டியிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பழுதடைந்த சாலையில் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: