மருது வீரபாண்டியர்களின் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: விடுதலை வீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கை சீமையின் தீரர்களான மருதிருவரை போற்றுகிறேன். விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களின் போராட்டமும் வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மருது வீரபாண்டியர்களின் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட் appeared first on Dinakaran.

Related Stories: