தடை உத்தரவு அமல்

சிவகங்கை, அக்.24: சிவகங்கை மாவட்டத்தில் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று திருப்பத்தூரிலும், அக்.27ல் காளையார்கோவிலிலும் மருதுபாண்டியர் குரு பூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது. அக்.30ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இதையொட்டி அக்.31வரை ஒரு வாரம் சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி பிரவீன்உமேஷ்டோங்கரே பரிந்துரையின் பேரில் 144தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் உரிய அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தடை உத்தரவு அமல் appeared first on Dinakaran.

Related Stories: