குலையனேரி ஊராட்சியில் சாலை பணிக்கு பூமிபூஜை

கடையநல்லூர், அக்.23: கடையநல்லூர் ஒன்றியம் குலையனேரி ஊராட்சியில் 9.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி துவக்கி வைத்தார். குலையனேரி ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான கனிமொழியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் தனது நிதியிலிருந்து 9.90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து நேற்று இதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காந்தி, துரை, ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post குலையனேரி ஊராட்சியில் சாலை பணிக்கு பூமிபூஜை appeared first on Dinakaran.

Related Stories: