சாத்தான்குளம் வழக்கில் 100 பக்க சாட்சியம் தாக்கல்

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் அளித்த 100 பக்க சாட்சியத்தை சிபிஐ தாக்கல் செய்தது. சாத்தான்குளம் வழக்கில் தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் திறந்த நீதிமன்றத்தில் 100 பக்கம் சாட்சியம் அளித்துள்ளார் என்றும் மீண்டும் குறுக்கு விசாரணை கேட்டு வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் இருக்கக் கூடாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். 100 பக்க சாட்சியம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

The post சாத்தான்குளம் வழக்கில் 100 பக்க சாட்சியம் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: