புதிய வகை பால் விற்பனையா? ஆவின் விளக்கம்

சென்னை: எந்தவிதமான புதிய வகை பால் விற்பனையையும் தொடங்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5% கொழுப்புச் சத்து, அதே 9% கொழுப்பு அல்லாத திடப்பொருட்கள் கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், எந்தவிதமான புதிய வகை பாலையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்ய வில்லை என விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துகளை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் கருத்துகளும் கேட்கப்பட உள்ளது. எந்தவிதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை. ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளின் விற்பனை தொடங்கும்பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புதிய வகை பால் விற்பனையா? ஆவின் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: