தூத்துக்குடி பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்

தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டய தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத்தேர்வு நடைபெற்றது. சோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார். சிறப்பு அழைப்பாளராக செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் புளோரா மேரி, பள்ளி முதல்வர் மெர்சி இமாகுலேட் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டய தேர்வில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர். இதில் கராத்தே பயிற்சி மைய மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: