முதுகுளத்தூரில் அரசு ஊழியர் குடியிருப்பு கட்டித்தர கோரிக்கை

சாயல்குடி, அக். 18: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முதுகுளத்தூர் வட்டக்கிளை சார்பில் 15வது மாநாடு முதுகுளத்தூரில் நடைபெற்றது.மாநாட்டுக்கு கிளை தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். செயலாளர் திருமுருகன் அறிக்கை வாசித்தார். மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் பெறும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முதுகுளத்தூரில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டித்தர வேண்டும், முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு போதிய இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்கம் செல்வகுமார் நன்றி கூறினார்.

The post முதுகுளத்தூரில் அரசு ஊழியர் குடியிருப்பு கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: