மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது

காரிமங்கலம், அக்.18: காரிமங்கலம் அடுத்த மோதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவலிங்கம்(48). இவரது தாய் அமிர்தம்மாள்(72). இவர் தனது மகன் பராமரிப்பில் இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன்(40) என்பவருக்கு, அமிர்தம்மாள் பெரியம்மா உறவு முறை. நேற்று முன்தினம், சிவலிங்கம் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், அங்கு சென்ற காளியப்பன், வீட்டில் தனியாக இருந்த அமிர்தம்மாளை பணம் கேட்டு மிரட்டினார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த காளியப்பன் அவரை சரமாரியாக அடித்து உதைத்தார். அமிர்தம்மாளின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் வந்தபோது, காளியப்பன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த அமிர்தம்மாளை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளியப்பனை கைது செய்தனர். பின்னர், காரிமங்கலம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

The post மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: