திருடிய வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.18: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அருகே பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(37), ஒப்பந்ததாரர். இவர் கடந்த 6ம் தேதி, குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். மீண்டும் 9ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4பவுன் நகை, ₹3ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(18) என்பவர், ரஞ்சித்குமார் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றதை நோட்டமிட்டு, வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, ஜன்னலில் வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டை திறந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் சிறையில் அடைத்தனர்.

The post திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: