தஞ்சாவூரில் இருந்து மதுரை, சென்னை கிளாம்பாக்கத்திற்கு புதிய பஸ் எம்எல்ஏ நீலமேகம் தொடங்கி வைத்தார்

 

தஞ்சாவூர், அக். 17: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மற்றும் சென்னை கிளாம்பாக்கம் தடத்திற்கு புதிய பேருந்துகளை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூர் 1 கிளை தடம் எண். 241S, 241T, 323A. 323H, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் சென்னை (கிளாம்பாக்கம்) மற்றும் தஞ்சாவூர், மதுரை வழித்தடத்தில் இயக்கவுள்ள 4 புதிய பேருந்துகளை நேற்று தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் கண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் பொது மேலாளர் தரன் , துணை மேலாளர் (வணிகம்) தமிழ்ச்செல்வன், கிளை மேலாளர்கள் ராஜேஷ் , யோகேஸ்வரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் இருந்து மதுரை, சென்னை கிளாம்பாக்கத்திற்கு புதிய பஸ் எம்எல்ஏ நீலமேகம் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: