பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா

 

பொன்னமராவதி, அக்.17: பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜா, பாஜக மாநில செயற்குழுஉறுப்பினர் சேதுபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக மகா சுதர்சன ஹோமம், திவ்விய பிரபந்த சேவார்த்தி மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றது. அதையடுத்து காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. பூஜையில் கோயில் பூஜகர் சௌமிய நாராயணன் தலைமையில் பூஜகர்கள் பங்கேற்று மந்திரம் ஓதி வழி நடத்தினர். மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்று விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை லட்சார்ச்சனை விழாக்குழு தலைவர் பழனியப்பன், செயலர் ராகவேந்திரா கண்ணன், பொருளர் மணி, நிர்வாகிகள்,சின்னையா, பொறியாளர் வைரவன் ஜோதிமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா appeared first on Dinakaran.

Related Stories: