சீர்காழியில் தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

சீர்காழி, அக்.17: சீர்காழியில் தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் குபேந்திரன் தலைமை வகித்தார். வருவாய் துறை அலுவலர் சங்கம் நிர்வாகி கணேசன் முன்னிலை வகித்தார். வட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் பெருமாள், வட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திருமுருகன் என்பவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட மாநில அரசை வலியுறுத்துவது, வருவாய் துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post சீர்காழியில் தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: