மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம், அக். 17: வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழைநீர் எளிதாக வெளியேற்றும் வகையில் மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் சரி செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடந்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் தேங்ககூடிய மழைநீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடர்ந்துள்ள முட்புதர்கள், புற்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்க்ள தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: