கடன் தொல்லை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மார்த்தாண்டம், அக்.17: மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பெருஞ்சாணிவிளையை சேர்ந்தவர் அருள் செல்வன் (36). அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அருள் செல்வன் பலரிடம் பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அருள் செல்வன் மிகுந்த மன வேதனையில் இருந்தாராம். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை குடும்பத்தினருடன் சகஜமாக பேசிவிட்டு அருள் செல்வன் தனது அறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த தந்தை குருசுமுத்து அறையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு மின் வயரினால் தூக்கு போட்டு சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து அருள் செல்வனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து குருசுமுத்து அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் தொல்லை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: