கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

 

கந்தர்வகோட்டை,அக்.16: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (17ம் தேதி) நடக்கிறது. எனவே புனல்குளம், தெத்து வாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தம்மாடிபட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி ,அரியணிப்பட்டி, காடவராயன் பட்டி, முதுகுளம், புதுநகர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் குளத்தூர்நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, கீரத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: