முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

 

வீரவநல்லூர், அக்.16: முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு பழுதுபார்ப்பு பணியின் போது மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலியானார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கண்டப்பட்டி கிராமம், சர்ச் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் லாரன்ஸ்(24), எலக்ட்ரீசியன். இவர் தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முக்கூடலை அடுத்த தென்திருப்புவனம் அருகில் தாமிரபரணி ஆற்றிலுள்ள உறைகிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரன்ஸ் மீது மின்சாரம் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து சக ஊழியர்கள் சேரன்மகாதேவி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பலவேசம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய லாரன்சை சடலமாக மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி appeared first on Dinakaran.

Related Stories: