சாலையோர பள்ளம் சீரமைப்பு

 

திருவாடானை, அக்.16:திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு செல்லும் சாலையில் மண் அரிப்பு காரணமாக மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்த செய்தி தினகரனில் படத்துடன் வெளியானதை தொடர்ந்து அந்த பள்ளம் சீரமைக்கப்பட்டது. திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோயில் இருப்பதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்த செய்தி நேற்று முன்தினம் தினகரனில் படத்துடன் வெளியானது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பணியாளர்களை கொண்டு அந்த பள்ளத்தை மணல் மூட்டைகளை அடக்கி சாலை ஓரத்தில் மண்ணை சமப்படுத்தி பள்ளத்தை சரி செய்தனர். தினகரன் செய்தியால் பள்ளம் சீரமைக்கப்பட்டதற்கு தினகரனுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

The post சாலையோர பள்ளம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: