கால்வாய்களில் கழிவுகளை கொட்டி மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும்

 

நாகர்கோவில், அக். 16: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிதாங்கோடு கிளை மாநாடு தக்கலையில் நடந்தது. ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சந்திரகலா உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் தேவதாஸ் அறிக்கை சமர்ப்பித்தார். புதிய செயலாளராக காளி பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

மேட்டுக்கடை – திருவிதாங்கோடு நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி செப்பனிட வேண்டும் திருவிதாங்கோடு வழி செல்லும் இரணியல் சானலை தூர்வார வேண்டும். இறைச்சி கழிவுகளை நீர்நிலைகள், கால்வாய்களில் கொட்டி மாசு படுத்துவதை தடுத்திட வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய செயலாளர் காளி பிரசாத் நன்றி கூறினார்.

The post கால்வாய்களில் கழிவுகளை கொட்டி மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: