மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் போலீஸ் கமிஷனர் ஆய்வு

 

மதுரை, அக். 16: மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை அக்.31ல் வருகிறது. இதையொட்டி விடுமுறை விடப்படும். அந்த நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு மக்கள் பயணம் செல்வார்கள். இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கும் இங்கிருந்து சென்னைக்கும் பயணிகள் வந்து செல்வார்கள்.

இது தவிர தென் மாவட்டங்களுக்கும் பயணிகள் வந்து செல்வார்கள். இதற்காக சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் பஸ்களை அந்தந்த பகுதிகளில் வரிசைபடி நிறுத்துவது, திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பது, பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் ஆய்வு செய்தார்.

The post மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் போலீஸ் கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: