வேதாரண்யம் வேதமா காளியம்மன் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி

 

வேதாரண்யம்,அக்.15: வேதாரண்யம் தேரடி வேதமாகாளியம்மன் கோவில் நவராத்திரியை முன்னிட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. வேதாரண்யம் நகரில் எழுந்தருளியுள்ள தேரடி வேதமாகாளியம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவின் நிறைவாக அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவாக வந்து வேதாரண்யம் காவல்நிலையம் எதிரே அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post வேதாரண்யம் வேதமா காளியம்மன் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: