கூடுதல் பொறுப்பு துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்

 

வேதாரண்யம், அக்.15: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வேதாரண்யம் வழக்கறிஞர் பாரிபாலன் வாழ்த்துப் பெற்றார்.
வேதாரண்யம் வழக்கறிஞரும், வேதாரண்யம் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் நாகை மாவட்ட திமுகதகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன் தமிழக துணை முதலமைச்சர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் பாரிபாலன், திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மேலும் கடலூர் மாவட்ட செயலாளரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் , திமுகதகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா பிற்படுத்தப்பட்டோர் வனத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, நாகை மாவட்ட திமுக செயலாளர் கவுதமன், அன்பகம் செந்தில் ஆகியோரையும் சந்தித்துப் வாழ்த்து பெற்றார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பரிபாலனை நாகை மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் வாழ்த்தினர்.

The post கூடுதல் பொறுப்பு துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற வழக்கறிஞர் appeared first on Dinakaran.

Related Stories: