மழை பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு நாளையொட்டி நேற்று ஒரகடம் தீயணைப்பு துறையினர் சார்பில் இயற்கை பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒரகடம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் உள்ளவர்களை வீட்டில் உள்ள உபகரணங்களை வைத்து எவ்வாறு மீட்பது, பேரிடர் காலத்தின்போது, கட்டிட இடிபாடுகள் இடையே சிக்கியோரை எப்படி மீட்பது, பலத்த காயம் அடைந்தோரை எவ்வாறு காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்றவை குறித்து விளக்கிக் கூறினர். இதனைத் தொடர்ந்து இடி, மின்னல், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் வாலாஜாபாத் தாசில்தார் இந்துமதி, துணை தாசில்தார் சுமித்ரா மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மழை பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: