மது குடிப்பதை கண்டித்த தொழிலாளி மீது தாக்குதல்

 

பாப்பிரெட்டிபட்டி, அக்.14: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டி போயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(44). கூலி தொழிலாளியான இவர், கடந்த 8ம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு பின்புறம் சந்தையூர் ஏரிக்கு செல்லும் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அந்த நேரம் அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் ராமஜெயம்(21) என்பவர், அங்கு மதுபாட்டிலுடன் மது குடிக்க சென்றார். இதை பார்த்த ராமலிங்கம், ஏன் இந்த வயதில் குடிக்கிறாய்? என கேட்டு அறிவுரை கூறினார். இதில், ஆத்திரமடைந்த ராமஜெயம், ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில், காயமடைந்த ராமலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பொம்மிடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ராமஜெயத்தை கைது செய்தனர்.

 

The post மது குடிப்பதை கண்டித்த தொழிலாளி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: