மாட்டுவண்டி பந்தயம்

 

சிங்கம்புணரி, அக்.14: சிங்கம்புணரியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திண்டுக்கல், காரைக்குடி நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 28 ஜோடிகள் என மொத்தம் 38 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.பெரிய மாடு பிரிவுக்கு 8 கிலோ மீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோ மீட்டர் தொலைவும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், ரொக்கத் தொகை என பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கபட்டது.

The post மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: