பொன்னமராவதியில் இலவச கண் சிகிச்சை முகாம்

 

பொன்னமராவதி, அக்.14: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி ராயல் லைன் சங்கம், அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் சங்கம், இளைஞர் பேரவை, மாதர் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மங்கை நாயக்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முகாமிற்கு ராயல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். அருவியூர் வடக்கு வளவு நகரத்த சங்க தலைவர் ராமஜெயம் முகாமை துவக்கி வைத்தார்.

இளைஞர் பேரவைத்தலைவர் மணிகண்டன், மாதர் சங்க தலைவர் புவனேஸ்வரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் 213 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 40 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டன.

அறுவை சிகிச்சைக்காக 30 பேர் தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் முகாமில் வர்த்தக கழகத்தலைவர் பழனியப்பன், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன்,சங்கத்தின் செயலாளர் திருப்பதி பொருளாளர் அன்புச்செல்வன் நிர்வாகிகள் மணிமுத்து,மாணிக்கவேல்,பாலமுரளி,பாலசுப்பிரமணியன், மீனாட்சிசுந்தரம், இளைஞர் பேரவை மாதர் சங்க நிர்வாகிகள் சுரேஷ், தண்டாயுதபாணி,சுபன்யா, தெய்வானை உட்படபலர்கலந்துகொண்டனர்.

The post பொன்னமராவதியில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: