கமிஷன், போனஸ் குறைப்பு கண்டித்து எல்ஐசி முகவர்கள் கோரிக்கை மனு

 

சீர்காழி, அக்.14: சீர்காழியில் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து முகவர்கள் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எல்ஐசி அலுவலகத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அரசையும், இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்தும், பாலிசிதாரர்களுக்கான பாலிசியில் கூடுதல் பிரிமியம் வசூலிக்கும் முறையை கண்டித்தும், எல்ஐசி முகவர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கி வந்த கமிஷனை குறைத்தும் பாலிசிதாரர்களுடைய போனசை குறைத்த ஒன்றிய அரசையும், எல்ஐசி யையும் கண்டித்து சீர்காழி எல்ஐசி கிளை மேலாளர் தமிழ்செல்வன், துணை கிளை மேலாளர் பிரபாகரன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள், கிளைத் தலைவர் பிரபாகரன், கிளைச் செயலாளர் சண்முகவடிவு, பொருளாளர் ரங்கராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சிவராமன், நெடுஞ்செழியன், பன்னீர்செல்வம், சத்தியா, சந்திரகலா, சந்திரமோகன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கமிஷன், போனஸ் குறைப்பு கண்டித்து எல்ஐசி முகவர்கள் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: