வேதாரண்யம் அருகே சிமெண்ட் மூட்டை விழுந்து வாலிபர் பரிதாப உயிரிழப்பு

 

வேதாரண்யம், அக்.14: வேதாரண்யம் அருகே கட்டி விழுந்த சிமெண்ட் மூட்டையை தூக்கியபோது கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் நாலுவேதபதி சாஞ்சாடி தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் குணச்செல்வன் (23). நேற்று நாலுவேதபதி சாஞ்சாடி தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (65) என்பவரின் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் புதுமனை புகுவிழா செய்வதற்காக, குணச்செல்வன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பழைய கட்டிப்பிடித்த சிமெண்ட் மூட்டையை தோளில் தூக்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபரின் தலையில் சிமெண்ட் கட்டி விழுந்ததில் காயமடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குணசெல்வன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து வருகின்றனர்.

The post வேதாரண்யம் அருகே சிமெண்ட் மூட்டை விழுந்து வாலிபர் பரிதாப உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: