குஜிலியம்பாறையில் தொடர் இடி, மின்னல் சத்தம்

 

 

குஜிலியம்பாறை, அக். 14: குஜிலியம்பாறையில் நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கனமழையை அடுத்து தொடர்ந்து இடித்த இடிச் சத்தம் காதை பிளக்க செய்தும், மின்னல் வெட்டு மக்களை பதபதைக்க வைத்தது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குஜிலியம்பாறையில் ஓரிரு தினங்களாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் கொட்டிய கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்தது. அதனை தொடர்ந்து இரவு 10 மணியில் இருந்து பலத்த இடி மற்றும் மின்னல்கள் தொடர்ந்து இடித்தவாறு பொதுமக்களை மிரளச் செய்தது.

The post குஜிலியம்பாறையில் தொடர் இடி, மின்னல் சத்தம் appeared first on Dinakaran.

Related Stories: