நித்திரவிளை அருகே சைக்கிள் கடையில் தீ

நித்திரவிளை, அக்.10: நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் ரொனால்டோ என்பவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் திடீரென புகை வந்து உள்ளது. இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறப்படுகிறது. தீ பிடித்ததில் சில சைக்கிள்கள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

The post நித்திரவிளை அருகே சைக்கிள் கடையில் தீ appeared first on Dinakaran.

Related Stories: