பாம்பு கடித்து விவசாயி சாவு

கோவில்பட்டி, அக். 10: கோவில்பட்டி அருகே உள்ள பீக்கிலிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மகேந்திரன் (43). விவசாயியான இவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மகேந்திரனை பாம்பு கடித்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாம்பு கடித்து விவசாயி சாவு appeared first on Dinakaran.

Related Stories: