சங்கரன்குடியிருப்பு கூட்டுறவு வங்கி கிளையில் கடனுதவி வழங்கும் விழா

சாத்தான்குளம், அக். 10: சங்கரன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்க கிளையில் 13 பேருக்கு ₹7.35 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2வது கிளையான சங்கரன்குடியிருப்பு கிளையில் கடனுதவி வழங்கும் விழா நடந்தது. சங்க செயலாட்சியர் வெங்கட்குமார் தலைமை வகித்து 13 உறுப்பினர்களுக்கு ₹7.35 லட்சம் கடனுதவிகளை வழங்கினார். சங்க செயலர் எட்வின் தேவாசீர்வாதம் வரவேற்று, சங்க செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள்கலந்து கொண்டனர்.கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிளை பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post சங்கரன்குடியிருப்பு கூட்டுறவு வங்கி கிளையில் கடனுதவி வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: