விவசாயிகளுக்கு நெல் விதைப்பு பயிற்சி

சிவகங்கை, அக்.10: இளையான்குடி அருகே மேலாயூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் கீழ் வைகை உபவடியில் உழவர் வயல் வெளிப்பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் மதுரைச்சாமி தலைமை வகித்தார். விவசாய ஆலோசகர் ராஜேஸ் மண் பரிசோதனை மற்றும் விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள், நெல் விதைப்பு கருவி பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மூத்த வேளாண்மை அலுவலர் கருணாநிதி, உயிர் உரங்கள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு கூறினார். பின்னர் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை விவசாயிகளுக்கு கூறினார். இப்பயிற்சியில் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு நெல் விதைப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: